Home celebrities எப்படி ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை: சிம்பு இரங்கல் அறிக்கை!

எப்படி ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை: சிம்பு இரங்கல் அறிக்கை!

310
0

கங்கை அமரனின் மனைவி மணிமேகலை மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று பல திறமைகளை கொண்டவர் இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். கோழி கூவுது பட த்தின் மூலமாக தன்னை ஒரு சிறந்த இயக்குநராக காட்டிக் கொண்டார். அதன் பிறகு எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், வில்லு பாட்டுக்காரன், சின்னவர், கோயில் காளை, அத்த மக ரத்தினமே, தெம்மாங்கு பாட்டுக்காரன், கும்பக்கர தங்கையா என்று ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். பெரும்பாலும் நடிகர் ராமராஜனை வைத்து பல படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது. இவரது படங்கள் அனைத்திற்கும் இளையராஜா தான் இசையமைத்துள்ளார்.

பல படங்களில் சினிமாவில் நடிக்கவும் செய்துள்ளார். இந்த நிலையில், இவரது மனைவியும், மங்காத்தா பட த்தை இயக்கிய இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரனின் தாயாருமான மணிமேகலை (69) நேற்று இரவு உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாநாடு பட த்தை இயக்கிய வெங்கட் பிரபுவின் தாயார் மணிமேகலை மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அன்பு இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நண்பர் பிரேம்ஜி, யுவன் உட்பட என் சகோதரர்களான உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை…

எதையும் சாதாரணமாக எளிமையாக எடுத்துக் கொண்டு செல்பவர்கள் நீங்கள்.

கடந்த இரண்டு வருடமாக, இதற்கு முன் நட்பாக இணைந்திருந்தாலும்.. இந்த இரண்டு வருடம் இணைந்து பணிபுரியும் போது எவ்வளவு அழகாக, எளிமையாக, எந்த சூழ்நிலையையும் கடந்து செல்கிறீர்கள் எனப் பார்த்திருக்கிறேன்.

ஆனால், அம்மா மீது மிகுந்த அன்பு கொண்ட உங்களுக்கு இதைக் கடப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதறிவேன்.

அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று.

ஆறுதல் சொல்ல முடியாத ஒரு இழப்பு.

அப்பாவிற்கும், குடும்பத்திற்கும், உங்களனைவருடனும், இழப்பையும்… வேதனையையும் பகிர்ந்துகொள்கிறேன்.

அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

கண்ணீருடன் சிலம்பரன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவிஷால் படத்தில் இணைந்த டப்பிங் நடிகை!
Next articleDhanush: அமேசான் பிரைமில் கர்ணன்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here