Home Celebrities கொரோனாவுக்கு பலியான நடிகர் வெங்கட் சுபா: பிரபலங்கள் இரங்கல்!

கொரோனாவுக்கு பலியான நடிகர் வெங்கட் சுபா: பிரபலங்கள் இரங்கல்!

188
0

கொரோனா தொற்று காரணமாக நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலை தற்போது நாடு முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கொரோனாவுக்கு சினிமா பிரபலங்களான இயக்குநர், ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த், இயக்குநர் தாமிரா, நடிகர் பாண்டு, பாடகர் கோமகன், டிகேஎஸ் நடராஜன், அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா என்று பலரும் உயிரிழந்துள்ளனர்.

தற்போது சினிமா நடிகரும், விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று நள்ளிரவு 12.48 மணிக்கு வெங்கட் சுபா உயிரிழந்துள்ளார். மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். டூரிங் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனல் மூலமாக சினிமா குறித்து விமர்சனம் செய்து வந்துள்ளார்.

தனது அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலமாக பல படங்களை தயாரித்து வரும் டி சிவாவின் நெருங்கிய நண்பர் வெங்கட் சுபா. இவரது மறைவுக்கு சிவா டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: என் நண்பன், சிந்தனையாளன், எழுத்தாளன், படைப்பாளி, நடிகன் #வெங்கட் சற்றுமுன் 12.48 am க்கு இறைவனடி சேர்ந்தார் என்பதை தாள முடியாத வேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன் T. சிவா என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து ராதிகா சரத்குமார், பிரகாஷ் ராஜ் என்று சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here