தனுஷ் நடித்த அனேகன் பட நடிகை அமைரா தஸ்தூர் தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஜூன் 7 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து, ரஜினிகாந்த், ரம்யா பாண்டியன், அருண் விஜய், சிம்ரன், சூரி, எம் எஸ் பாஸ்கர், அசோக் செல்வன், கீர்த்தி சுரேஷ், பவித்ரா லட்சுமி, காயத்ரி, கௌதம் கார்த்திக், வேல்முருகன், சாந்தனு, கீர்த்தி சாந்தனு, ரித்விகா, நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஹரிஷ் கல்யாண், விஜே அஞ்சனா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, நகுல், காளிதாஸ் ஜெயராம் என்று சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் தனுஷ் நடித்த அனேகன் பட நடிகை அமைரா தஸ்தூரும் இணைந்துள்ளார். ஆம், நேற்று தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: 18 முதல் 44 வயது உள்ளவர்களை உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். கடந்த வியாழன்று எனது கோவிஷீல்டு முதல் தடுப்பூசியை நான் போட்டுக்கொண்டேன்.
ஆனால், மறுநாள், லேசான காய்ச்சல், நடுக்கம் இருந்தது. அதற்கான மாத்திரைகள் நான் எடுத்துக் கொண்டேன். வெள்ளியன்று தலைவலி, உடல்வலி இருந்தது. மருத்துவரின் ஆலோசனை படி மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டேன். ஆகையால், அனைவரும் முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு லேசான அறிகுறிகள் தான் தென்படுகிறது. பெரும்பாலானோருக்கு அப்படி ஏதும் இல்லை.
ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தான் தடுப்பூசி போட்ட தற்கான அறிகுறி இருக்கும். அவ்வளவு தான். நீங்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டால், நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம். மற்றொரு வாழ்க்கை நமக்கு கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram