கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரோஜா சீரியல் நடிகை நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம், நீங்கள் எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஜூன் 7 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து, ரஜினிகாந்த், ரம்யா பாண்டியன், அருண் விஜய், சிம்ரன், சூரி, எம் எஸ் பாஸ்கர், அசோக் செல்வன், கீர்த்தி சுரேஷ், பவித்ரா லட்சுமி, காயத்ரி, கௌதம் கார்த்திக், வேல்முருகன், சாந்தனு, கீர்த்தி சாந்தனு, ரித்விகா, நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஹரிஷ் கல்யாண், விஜே அஞ்சனா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, நகுல், காளிதாஸ் ஜெயராம், அமைரா தஸ்தூர், பென்னி தயால் மற்றும் அவரது மனைவி கேத்தரின் தங்கம் என்று சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலின் பிரபல நடிகை பிரியங்கா நல்கரி இன்று தனது முதல் கொரோனா கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். அவருடன் இணைந்து அவரது இரு சகோதரிகளும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். நீங்கள் எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு, தடுப்பூசி போடும் போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.