Home celebrities மனைவியுடன் சேர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட சூப்பர் சிங்கர் நடுவர் பென்னி தயால்!

மனைவியுடன் சேர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட சூப்பர் சிங்கர் நடுவர் பென்னி தயால்!

322
0

தனது மனைவியுடன் சேர்ந்து சூப்பர் சிங்கர் நடுவரான பென்னி தயால் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஜூன் 7 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து, ரஜினிகாந்த், ரம்யா பாண்டியன், அருண் விஜய், சிம்ரன், சூரி, எம் எஸ் பாஸ்கர், அசோக் செல்வன், கீர்த்தி சுரேஷ், பவித்ரா லட்சுமி, காயத்ரி, கௌதம் கார்த்திக், வேல்முருகன், சாந்தனு, கீர்த்தி சாந்தனு, ரித்விகா, நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஹரிஷ் கல்யாண், விஜே அஞ்சனா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, நகுல், காளிதாஸ் ஜெயராம், அமைரா தஸ்தூர் என்று சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியின் நடுவரான பென்னி தயால் தனது மனைவி கேத்தரின் தங்கம் உடன் இணைந்து முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து பென்னி தயால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளோம். நன்றியுடன் உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by BENNY DAYAL (@bennydayalofficial)

Previous articleகாய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு இருந்தது: அனேகன் நடிகை அமைரா தஸ்தூர்!
Next articleVP10: வெங்கட் பிரபுவின் 10ஆவது படத்தில் ஒரு ஹீரோ, 3 ஹீரோயின்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here