Home celebrities VP10: மாநாட்டுக்குப் பிறகு நெக்ஸ்ட் படத்தை அறிவித்த வெங்கட் பிரபு!

VP10: மாநாட்டுக்குப் பிறகு நெக்ஸ்ட் படத்தை அறிவித்த வெங்கட் பிரபு!

283
0

இயக்குநர் வெங்கட் பிரபு தனது அடுத்த படம் குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சென்னை 600028 படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இந்தப் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விஜய் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டார். சிறந்த குடும்ப படத்திற்காக தமிழ்நாடு மாநில விருது இந்தப் படத்திற்கு வழங்கப்பட்டது.

சென்னை 600028 பட த்திற்குப் பிறகு சரோஜா, கோ, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 600028 பார்ட் 2, பார்ட்டி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது இயக்கியுள்ள சிம்புவின் மாநாடு விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அண்மையில் தான் மாநாடு படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், மாநாடு படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் இயக்குவது குறித்து வெங்கட் பிரபு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி முருகானந்தம் தயாரிப்பில் தனது 10ஆவது படத்தை இயக்கவுள்ளார். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleஓடி ஓடி உதவி செய்யும் குக் வித் கோமாளி 2 பிரபலம் தர்ஷா குப்தா!
Next articleமுதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட காளிதாஸ் ஜெயராம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here