Home Celebrities ஜாக்கிரதையா இருங்க: மனைவியுடன் சேர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட சூரி!

ஜாக்கிரதையா இருங்க: மனைவியுடன் சேர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட சூரி!

143
0

நகைச்சுவை நடிகர் சூரி அவரது மனைவியுடன் சேர்ந்து முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் அலை தற்போது மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உருமாறி வந்த கொரோனாவின் 2ஆவது அலையின் காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணைக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

எனினும், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதோடு, தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி வரையில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி காயத்ரி, சிம்ரன், அருண் விஜய், மதுரை முத்து, எம் எஸ் பாஸ்கர் என்று சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.

பின்னணி பாடகர் வேல்முருகனும் நேற்று உயிர் காக்கும் கேடயமே தடுப்பூசி என்ற பாடலை பாடி தடுப்பூசி போட்டு கொண்டார். இதையடுத்து, நகைச்சுவை நடிகர் சூரியும் நேற்று கொரோனா முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இது குறித்து சூரி டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்னைக்கு நானும் என் மனைவியும், பக்கத்துல இருக்குற மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டோம். இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம். வாய்ப்பு கிடைக்கும் போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் சூரி ஹீரோவாக நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here