Home celebrities இக்கட்டான சூழலில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட ஸ்ரேயா கோஷல்!

இக்கட்டான சூழலில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட ஸ்ரேயா கோஷல்!

331
0

பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.

கடந்த 1984 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தவர் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். 4ஆவது வயது முதலில் இசை மீது ஆர்வம் கொண்ட ஸ்ரேயா கோஷல், 6ஆவது வயதில் அதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டார். இதையடுத்து 16ஆவது வயதில் சரிகம என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார்.

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக கடந்த 2002 ஆம் ஆண்டு திரைக்கு வந்த தேவதாஸ் என்ற பாலிவுட் படத்தில் பாடல் பாடியுள்ளார். அன்று முதல் இன்று வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பாகிஸ்தானி, போஜ்பூரி, இங்கிலீஸ், நேபாளி, மராத்தி, ஒடியா, கன்னடம், குஜராத்தி, பிரெஞ்ச், பஞ்சாபி என்று பல மொழிகளில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)

கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நெருங்கிய நண்பரும், தொழிலதிபருமான ஷிலாதித்யா முகோபாத்யாயாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பல பாடல்கள் பாடியுள்ளார். கடந்த மார்ச் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, ஏப்ரல் மாதம் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கடவுளின் அருளால் இன்று பிற்பகல் விலைமதிப்பற்ற அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது போன்ற ஒரு உணர்வை இதற்கு முன்னதாக அடைந்ததில்லை. ஷிலாதித்யா, நான் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அளவுகடந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம்.

உங்களது அளவுகடந்த வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous articleAnjana Rangan Vaccination: தடுப்பூசி போட்டுக்கொண்ட விஜே அஞ்சனா!
Next articleதயங்க வேண்டாம், தடுப்பூசி போடுங்கள்: ஹரிஷ் கல்யாண்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here